நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜூன் 09, 2017

விசாகத் திருநாள்

உவரி..

திருச்செந்தூரில் இருந்து குலசேகரன்பட்டினம், மணப்பாடு வழியாக கன்யாகுமரி செல்லும் சாலையில் அமைந்துள்ள அழகான கடற்கரைக் கிராமம்...

ஸ்ரீ சுயம்புலிங்க ஸ்வாமியின் திருக்கோயில் அமைந்திருப்பதும் உவரியில் தான்...

ஸ்ரீ மனோன்மணி அம்பிகை சமேத ஸ்ரீ சந்திர சேகரர்
எங்கள் குலதெய்வம் வீற்றிருக்கும் திருவூர்...

வருடத்தின் அனைத்து மாதங்களிலும் திருவிழாக்கள் நிகழ்வது சிறப்பு..

சில தினங்களுக்கு முன் வைகாசி விசாகம் வெகு விமரிசையாக நிகழ்ந்தது...

வைகாசி விசாக தினத்தில் -
மகர மீனுக்குக் காட்சியளித்து முக்தி நல்கியதாக ஐதீகம்..

அந்த வைபவத்தையொட்டி ஆயிரக்கணக்கில் -
அன்பர்கள் குடும்பத்துடன் வந்து இறை தரிசனம் செய்திருக்கின்றனர்..

இன்றைய பதிவினில் - வைகாசி விசாக தரிசனக் காட்சிகள்...







கடற்கரையில் ஸ்வாமி வீதியுலா
இறை தரிசனத்திற்குக் காத்திருக்கும் மீன்கள்

திருநாளையொட்டி கடலிலும் கோயில் திருக்குளத்திலும் நீராடிய மக்கள் 
ஸ்ரீ சுயம்புலிங்கப் பெருமானை தரிசனம் செய்ததுடன்

ஸ்ரீ பிரம்மசக்தி அம்மன், ஸ்ரீ வன்னியடி சாஸ்தா, ஸ்ரீ பேச்சியம்மன், 
ஸ்ரீ மாடஸ்வாமி, ஸ்ரீ இசக்கியம்மன், ஸ்ரீ சிவனணைந்த பெருமாள், 
ஸ்ரீ முன்னோடியார் மற்றும் பரிவார மூர்த்திகளையும் தரிசனம் செய்தனர்..







நாள் முழுதும் கோலாகலமாக இருந்திருக்கின்றது - உவரியின் கடற்கரை...

இறைவன் உறையும் திருத்தலத்தில் -
மகிழ்ச்சியும் மன நிறைவும் 
மங்கலமும் வரப்பிரசாதங்களாகின்றன...

வாழ்க வளமுடன்..
வளர்க நலமுடன்!..
***

7 கருத்துகள்:

  1. தரிசனக் காட்சிகள் அனைத்தும் அருமை ஐயா...

    பதிலளிநீக்கு
  2. அன்பின் ஜி
    காட்சிகள் நேரில் கண்டது போல் தெளிவு

    பதிலளிநீக்கு
  3. உவரி கோவில் பார்த்தது இல்லை.
    உவரியில் நடந்த விழாவை நேரில் பார்த்தமாதிரி இருக்கிறது.
    அருமையான தரிசனம்.

    பதிலளிநீக்கு
  4. மகர மீனுக்கு முக்தி கொடுத்த கதை கேள்விப்படவில்லையே

    பதிலளிநீக்கு
  5. தகவலும் படங்களும் அருமை!

    உவரி தெரியும். ஆனால் கோயிலுக்குச் சென்றதில்லை

    --துளசி, கீதா

    பதிலளிநீக்கு
  6. முருகனின் தரிசனத்தைத் தந்தமைக்குக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..