நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜூன் 20, 2013

குருவிக்கூடு





அடர்ந்த மரங்களில் வலிமையான கிளைகளில் கட்டப்பட வேண்டிய கூடு!...

பாவம் ... பரிதவித்துப் போன குருவிகள் - வாழ வழி தேடி - வாடி வதங்கிப் போகும் வாழையிலையை மடக்கிக் கூடாக கட்டியுள்ளன..  





Facebook -ல் வெளிவந்த படத்தைக் கண்ட பிறகு மனம் மிகவும் வலிக்கின்றது.  

(படம்: நன்றி - பசுமைப் புரட்சி)

இந்த வாழை இலை எத்தனை நாட்களுக்குத் தாங்கும்?...

''காக்கை குருவி எங்கள் ஜாதி!...'' - என்று பாடினார் மகாகவி பாரதியார். 

இயற்கையுடன் இணைந்த வாழ்வு நம்முடையது. 

அவைகளுடைய வாழ்வாதாரத்தை - அழித்து ஒழித்து விட்டு நாம் சாதிக்கப் போவது எதுவுமில்லை!.. 

இந்தக் கொடுமையைக் கண்ட பிறகாவது மரங்களை வாழ வைக்க வேண்டிய அவசியத்தினை தயவு செய்து உணருங்கள்

இந்த வாழை - வளர்ந்துள்ள வீட்டுக்காரரே... 

தாங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்!... 

காப்பாற்றுவீர்கள் என்ற - நம்பிக்கையுடன் 
 குருவிகள் உங்களிடம் அடைக்கலம்  ஆகியுள்ளன!...

அவற்றின் நம்பிக்கை மெய்ப்படவேண்டும்!..

எல்லாம் வல்ல இறைவனே!...  
இந்த சிறு குடிலைக் காத்தருள்க!...

2 கருத்துகள்:

  1. அவற்றின் நம்பிக்கை மெய்ப்படட்டும்...

    பதிலளிநீக்கு
  2. அவற்றின் நம்பிக்கை மெய்ப்பட தங்களைப் போன்றோரின் நல்வாழ்த்துக்களுடன் இறைவன் திருவருளும் துணை செய்யட்டும்!.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..