நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, மார்ச் 10, 2013

திருவைகாவூர்

யமன் தண்டிக்கப்பட்ட திருத்தலம். 

அதனால் திருத்தலத்தின் எதிரே தீர்த்தத்தினை உண்டாக்கி - அதில் நீராடி, தன் பிழைதனைப் பொறுத்த இறைவனைப் பணிந்து வணங்கினான்.

இறைவன் ஆலமர் செல்வனாக திருக்கரத்தினில் பிரம்புடன் அமர்ந்தார்.

பிரம்பு - அது அடியவர்களுக்கு அல்ல!...
தகாததைச் செய்யுங் கொடியவர்களுக்கு!...

திருக்காளத்தி, திருக்கோகர்ணம், ஸ்ரீசைலம், இராமேஸ்வரம் - போல மகாசிவராத்திரி சிறப்பாகக் கொண்டாடப்படும் தலம் - திருவைகாவூர்.


இறைவன் - ஸ்ரீவில்வவனேஸ்வரர் 
அம்பிகை - ஸ்ரீவளைக்கைநாயகி
தீர்த்தம் - யமதீர்த்தம்
தலவிருட்சம் - வில்வம்

கிழக்கு முகமாக ஐயனின் இடப்புறம் அம்பிகையின் சந்நிதி.

இதனை மணக்கோலம் என - அகத்திய மாமுனிவர் தரிசனம் கண்டார்.

அருணகிரி நாதரும் வழிபட்டிருக்கின்றனர்.

மஹாவிஷ்ணுவும், பிரம்மனும் எங்குமே காணப்படாத வகையில் சந்நிதியின் இருபுறமும் எழுந்தருளியுள்ள திருத்தலம்.

யமபயம் தீர்க்கும் தலம். எனவே - 

''...யமனுக்கே வேலையில்லாத் திருத்தலத்தில் நமக்கென்ன வேலை...'' என்று நவக்கிரகங்களும் வெகு தொலைவுக்கு ஓடிப் போயினர்.

திருவைகாவூர் திருக்கோயிலில் நவக்கிரகங்கள் இடங் கொள்ளவில்லை.

ஐயனையும் அம்பிகையையும் தரிசிக்க வரும் அன்பர்களை வரவேற்பார் போல  - நந்தியம்பெருமான் கிழக்கு முகமாக வீற்றிருக்கின்றார்.

திருக்கோயிலின் எதிரில் யம தீர்த்தம்.

திருஞானசம்பந்தப்பெருமானின் தேவாரத் திருப்பதிகம் பெற்ற திருத்தலம்.



மகாசிவராத்திரி அன்று சிவபெருமானுக்கு விசேஷ பூஜைகளுடன் திருவிழா .

விடியற்காலையில் கோபுரத்தின் கீழ் வேடனை நிறுத்தி, மூலஸ்தானத்தில் சிவபெருமானுக்கும்,

அதன்பின் சிவகதி அடைந்ததை நினைவுபடுத்தும் வகையில்  - வேடனுக்கும் தீபாராதனை நிகழும். 

சிவராத்திரியன்று - கும்பகோணத்திலிருந்து திருவைகாவூருக்கு விடிய விடிய பேருந்துகள் இயங்குகின்றன.

திருவைகாவூர் - சுவாமிமலைக்கு வடக்கே 10 கி.மீ. தொலைவில் உள்ளது.

கும்பகோணத்திலிருந்து நகர பேருந்து வசதிகள் அதிகம்.

ஐயம்பேட்டை, பாபநாசத்திலிருந்து சிற்றுந்துகள் இயங்குகின்றன.

கொல்வாரேனுங் குணம் பல நன்மைகள்
இல்லாரேனும் இயம்புவர் ஆயிடின்
எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால்
நல்லார் நாமம் நமசிவாயவே!..
திருஞானசம்பந்தர் (3/49)
                                               
''திருச்சிற்றம்பலம்''
* * *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..