நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஜனவரி 05, 2013

திருப்பாவை - 21

ஆண்டாள் அருளிய திருப்பாவை 
திருப்பாசுரம் - 21

தோற்றமாய் நின்ற சுடரே!...
ஏற்றகலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்!
ஊற்றம் உடையாய்! பெரியாய்! உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே!
துயிலெழாய்!
மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன் வாசற்கண்
ஆற்றாது வந்து உன்னடி பணியுமா போலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர்   எம்பாவாய்.!...


ுரந்ிருக்கும் பாலைப் பெறுவற்காகியின் கீழ் கத்த் ங்கினால் - கத்ில் பல் பங்கி - நுரையுடன் ும்பும் வண்ணம் - ாமாகே  - ம் கன்றுகுக்கு என்று கூடத்ுக் கொள்ளாமல் - 

( நந்ோபன் இருக்கையில் நக்கு என்னை , ம் கன்றுக்கான் என்னை -  என் )

த்ிரத்ை நிறத்த் ும் வள்ளாகியெரும் புக்கைப் பாமித்ு  - பிபாலித்ு வும் நந்ோபின் அன்பு மே!...ுயில் நங்கி எழுவாயாக!... க்ர்கின் குறீர்த்ு அருள்பன் ந!...

அடியவர் தம் அல்லல் தொலைய என்று அவதரித்தருளும் அருள் வடிவும் நீ!...

இப்புவனம் பெற்ற  - பெரியனவற்றுள் எல்லாம் பெரியவன் நீ!...

thanjavur14
உன்னடி போற்றி வந்தோம்!...
இவ்வுலகின் தோற்றமாகத் தோன்றிய உயிர்களுக்கு உள்ளே, ஏற்றமாக நின்ற  - நிறை சுடரும் நீ!...

( நீ இன்னும் தூங்குவது போல நடிக்கலாமா?...)

துயில் எழுந்து வருவாயாக!...

''நாம் வலியுடையோம் - வெல்லும் வகையுடையோம்'' என்று மார் தட்டி நின்ற மாற்றார் எல்லாம்,

உன்னைக் (கனவில்) கண்ட மாத்திரத்தில் - தங்கள் வலியை இழந்து, வகையை இழந்து -

''இனியும் தாமதித்தால் எங்கே நம் வாழ்வையும் இழந்து விடுவோமோ?..'' என்று அஞ்சி நடுங்கி அரண்டு புரண்டு ஆற்ற மாட்டாமல் அலறி அடித்துக் கொண்டு ஓடிவந்து -

உன் திருவடித் தாமரைகளைக் காணவும் வெட்கப்பட்டு, வேறு கதியின்றி மாளிகையின் வாசலில் - நின் பாத மலர்கள் பதிந்த படிக்கட்டுகளில் - தலை வைத்துக் கிடக்கின்றார்களே!....அவர்களைப் போல் -

நாங்களும் உன் வாசல் தேடி போற்றி வந்தோம்!...புகழ் மாலை சாற்றி வந்தோம்!...  துயில் எழுந்து வருவாயாக!...
நன்றி - ரதி, தேவி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..