நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 11
புதன் கிழமை
காசிக்கு நிகரான திரு ஐயாறு திருத்தலத்தில் நிகழ்வுறும் சித்திரைப் பெருந்திருவிழாவில் கடந்த திங்கள் (22/4) அன்று தேரோட்டம்..
காலையில் புறப்படும் ரதங்கள் முற்பகலில் மேல ரத வீதியில் நிலை நிறுத்தப்படும்..
மாலையில் மீண்டும் வடம் பிடிக்கப்பட்டு முன்னிரவுப் பொழுதில் தேரடியை வந்தடையும்..
அந்த அளவில் நேற்று பெரிய தேர் நிலை அடைந்த நேரம் 8:30..
கிழக்கு ரத வீதியில் சிறிது தூரம் ஸ்ரீ ஷண்முகப் பெருமானின் திருத்தேர் வடம் பிடிக்கின்ற பாக்கியம் எனக்குக் கிடைத்தது..
எட்டரை மணிக்குப் பிறகு அம்பாள் ரதம் தேரடியை அடைவதற்கு நேரம் ஆகும் என்பதால் அந்த அளவில் இல்லம் திரும்பினேன்..
முழங்கால் பிரச்னை தீராத நிலையில் இந்த அளவுக்கு வரம் பெற்றிருப்பது பெரும்பேறு..
தேரோட்டத்தில் நான் பதிவு செய்த காட்சிகள் இன்றைய பதிவில்..
கீழுள்ள படங்கள் -
திருவையாறு ஸ்ரீ ஐயாறப்பர் Fb ..
அவர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றி..
கங்கையைச் சடையுள் வைத்தார் கதிர்ப்பொறி அரவும் வைத்தார்
திங்களைத் திகழ வைத்தார் திசைதிசை தொழவும் வைத்தார்
மங்கையைப் பாகம் வைத்தார் மான்மறி மழுவும் வைத்தார்
அங்கையுள் அனலும் வைத்தார் ஐயன் ஐயாற னாரே.. 4/38/1
-: திருநாவுக்கரசர் :-
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***