நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 7
சனிக்கிழமை
மூன்று நாட்கள் திருமலையில் தங்கி விட்டு கிழமை காலையில் திருப்பதியை வந்தடைந்தோம்..
அங்கு ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாளை தரிசித்து விட்டு மன்னார்குடி விரைவு வண்டியில் பயணித்து, விழுப்புரத்தில் இறங்கிக் கொண்டோம்..
முன்பதிவு மயிலாடுதுறைக்குத் தான்.. இந்த வண்டி அங்கு செல்வதற்குள் மூன்றாவது நடைமேடையில் இருந்து தஞ்சைக்கான வண்டி புறப்பட்டிருக்கும்..
எனவே,
திருச்சி ரயிலில் மாறி அரியலூரில் இறஙகி
திரு ஐயாறு - வழியாக இரவு ஒன்பது மணியளவில் நல்லபடியாக வீட்டிற்கு வந்து சேர்ந்தோம்..
**
தாழ்சடையும் நீள்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்நாணும் தோன்றுமால் - சூழும்
திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து.. 2344
-: பேயாழ்வார் :-
இன்று காலையில்
தஞ்சையில்
தேர்த்திருவிழா..